திங்கள், 27 அக்டோபர், 2008

தித்திக்கும் தீபத் திருநாள்.


வணக்கம் அன்பர்களே, வைகாசி மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியன்று பூக்கின்றது நமது தித்திக்கும் தீப திருநாள். வருடங்கள் உருண்டோடுகின்றது ஆனால், நமது இந்தியர்களோ இன்றளவும் உருளுகிரார்களே தவிர ஓடாமல் நின்ற இடத்திலேயே நிற்கின்றனர். நான் கூற வருவது என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பத்து ஒன்று வருடம் ஆகி விட்டது. நாம், அதாவது இந்தியர்கள் எவ்வளவோ செலவு செய்கின்றோம், சுய ஆசைகளுக்கு நம்மை அர்ப்பணிக்கின்றோம் , மேலும் தேவை இல்லாத எவ்வளவோ காரியங்களில் ஈடு படுகின்றோம்.

சுதந்திரம் பெற்றால் மட்டும் போதாது; அதனை நல்வழியில் நாம்தான் கையாள வேண்டும். பெரும்பான்மையினர் எதற்குத் தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றோம் என்று கூட தெரியாமல் இருக்கின்றனர். அப்படி உள்ள பட்சத்தில் தீப திருநாள் தேவை தானா???

தேவை இல்லை என்று நான் கூற முற்படவில்லை மாறாக இனிமேலாவது தீப திருநாளின் அர்த்தம் அறிந்து கொண்டாடுவோமாக என்றுதான் சொல்ல கடமை பட்டுளேன். அன்பர்களே நமக்காக துயர் கொள்ளும் பலரை மனதில் கொண்டு இந்த தீப திருநாளை ஆடம்பரம் இல்லாமல் குறுகிய கால கட்டத்தில் எளிய முறையில் கொண்டாடுவோம்.

அனைத்து இந்திய நல் உள்ளங்களுக்கும் எனது தீபத் திருநாள் நல் வாழ்த்துகள்.

சுடர் விட்டு எரிகின்றது அங்கு தீப ஒளி,
இங்கு படர் விட்டு எரிகின்றது நம் இந்திய ஒளி,
இரு ஒளி ஒரு சேர்ந்து சுடர் தரும் நாளை எண்ணி,
வாழ்கையை நல் முறையில் செலுத்துவோம்....

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

தாய்மொழி வலைப்பதிவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.

தீபாவளி ஐப்பசி மாதம் வருவது, ‘வைகாசி' அல்ல.. திருத்திக் கொள்ளவும்..