ஞாயிறு, 19 அக்டோபர், 2008

இந்த நாட்டின் சொந்தக்காரர் யார்?


இந்த அழகான நாட்டிற்குச் சொந்தக்காரர்கள் யார் என்று ஒரு கேள்வி எழுந்து வந்தால், அதற்குப் பதில் ஒரே வார்தையில்தான் அடங்கியுள்ளது. இது நமது நாடு என்று சொல்வதில் ஒவ்வொரு மலேசியக் குடிமகனும் பெருமைப்பட வேண்டும்.

இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் இது மலேசியர்களின் நாடு என்று பெருமையோடு சொல்பவர்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். மலேசியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது எனது நாடு என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். சற்று உள்நோக்கினால், நமது நாடு மற்ற நாடுகளை விட எவ்வளவோ வித்தியாசமான நாடு என்று சொல்லலாம். வித்தியாசமான பண்பாடு, பல்வேறான கலாசாரங்கள், பலவகையான உணவுகள் போன்ற பல விசயங்களில் நாம் வேறுபட்டுள்ளோம். எது எப்படியாயினும், நான் ஒரு மலேசியன் என்று சொல்ல நானும், நீங்களும், அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
ஓர் இனத்தின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மற்ற இனத்திற்குக் கிடைக்கும் உரிமைகள் அனைத்தும் அந்த இனத்திற்கும் சென்று சேர வேண்டும். இன, மதம், போன்ற பிரிவினைகளுக்கு ஒற்றுமை ஒன்றே தீர்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

சுதந்திரம் பெற்று 51 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஒவ்வொரு மலேசியக் குடிமகனும் இந்த நாட்டிற்குச் செய்ய வேண்டியது கடலளவு உண்டு. நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்காமல், நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று நாம் சிந்திப்போம். இது எனது நாடல்ல, உனது நாடும் அல்ல, இது நமது நாடு.

வாழ்க மலேசியா!

ஆக்கம்: கலையமுதன் ரவீந்திரன்
(
தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Good analysing of our Malaysia country. I think everybody should have the patriotic towards our nation. Malaysia Boleh!!!

Good attempt!Congratulations!!!

பெயரில்லா சொன்னது…

ம் அழகான பதிவு...தொடருங்கள்!

நானும் மலேசிய குழந்தையே!
வாழ்க நம் பொன்னாடு!