புதன், 31 டிசம்பர், 2008

புதிய ஆண்டு



இன்னும் சில மணி நேரத்தில் நாம் ஒரு புதிய ஆண்டினுள் கால் தடத்தை பதிக்க உள்ளோம். புதிய முகங்கள், புதிய சுற்றுச்சூழல், புதிய இடங்கள், புதிய கனவுகள் போன்ற புத்தம் புது விஷயங்களை நாம் சந்திக்க உள்ளோம். கடந்த வருடத்தில் நடந்த நல்ல விஷயங்களை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம். கெட்டதை மறந்து விடுவோம். பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற புதிய உலங்கங்களுக்கு செல்லும் அணைவருக்கும் எங்களின் வாழ்த்துகள்.எங்களின் வலைப்பதிவின் சார்பாக அணைவருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

திங்கள், 29 டிசம்பர், 2008


நல்லாசிரியரின் நல்லியல்புகள்

தோற்றப்பொலிவு
சுறுசுறுப்பு
தூய உள்ளம்
நேரிய வாழ்க்கை
மொழிப் பற்று
மொழிப் புலமை
அறிவாற்றல்
உணர்திறன்
உணர்த்தும் திறன்
கற்பனைத் திறன்
சொல்லும் திறன்
விளக்கும் திறன்
தெளிவுற அறிந்திடுதல்
மாணர்வர்களிடத்து அன்பு
உடன் ஆசிரியர்களிடம் நல்லுறவு
வரலாற்றுணர்வு
அறிவியல் அணுகுமுறை
விழிப்புணர்ச்சி
அறியும் அவா
ஆய்வு வேட்கை
பயிற்றுவித்தலில் ஆர்வம்
காலம் போற்றுதல்
சமூகக் கடமையுணர்வு
வாய்மை
தனித்தன்மை
தலைமைப் பண்பு
வழிகாட்டுதல்
தியாகம்
சான்றான்மை

எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த பண்புகள் இருக்க வேண்டும் என்று கூற முடியாது. இவை அனைத்தும் இருந்தே ஆக வேண்டும் என்றுதான் கூறவேண்டும்......

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி


வெள்ளி, 26 டிசம்பர், 2008

இன்றைய திகதியில்

கடந்த வருடம் இதே திகதியில் மனித இனத்தை அழிக்கும் சக்தி வாய்ந்த சுனாமி என்ற பேரலை எத்தனையோ மனித உயிர்களை மூழ்கடித்தது. வருடங்கள் உருண்டோடினாலும் அந்த பேரலையின் நினைவுகள் சிலரின் எண்ணத்தில் இன்னும் பசுமையாக உள்ளது. இன்று வரை இதற்கு இயற்கை காரணமா இல்லை மனிதர்கள் மீது இந்த பூமி தாய் கொண்ட ஆத்திரமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற சுனாமி அலை மீண்டும் நிகழுமா என்பது கடவுளின் கையில் தான் உள்ளது.

இந்த சுனாமி பேரலையில் தப்பித்தவர்கள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களில் ஒருவர் மேழுள்ள படத்தில் உள்ள குழந்தைதான்.யாரென்று தெரிகின்றதா ?

ஆம் துளசி என்ற குழந்தைதான் அது. நூற்றுக்கணக்கான மனிதர்களை கொன்ற அதே நீர்தான் இந்த குழந்தையை காப்பாற்றியது.அலையில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மீண்டும் அதே அலையில் மிதந்து கொண்டே உயிர் தப்பியது.பாவம் இந்த குழந்தையை கொல்ல அந்த பேரலைக்கு மனசு வரவில்லை என நினைக்கின்றேன்.

இந்த பேரலை மீண்டும் நிகழாமல் இருக்க நாம் கடவுளை பிராத்தனை செய்வோமாக ........

இந்த பேரலையின் அழிவை யாராலும் மறக்க முடியாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

வியாழன், 25 டிசம்பர், 2008

கிருஸ்துமஸ் வாழ்த்துகள்


இந்த இன்பமான நாளில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் அனைத்து கிருஸ்துவ குடும்பங்களுக்கும் எங்களின் வலைப்பதிவின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதில் சிறதும் சந்தேகம் இல்லை.

வாழ்த்துகளுடன்
தாய்மொழி வலைபதிவார்கள் குழு

வெள்ளி, 19 டிசம்பர், 2008

முக்கிய தினங்கள்

நமது நாள்காட்டியை அடக்கடி பார்ப்பது ஒரு வழக்கமான செயல். ஆனால் சில தேதிகள் சில முக்கிய தினங்களாக விளங்குகின்றன.அவைகளில் சில உங்களுக்காக.

மே 1- உலக தொழிலாளர் தினம்.

ஜனவரி 31- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்.

ஏப்ரல் 7- உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22- உலக பூமி தினம்

மே 3 - அனைத்துலக ஆற்றல் தினம்.

மே 31 - புகையிலை இல்லாத தினம்

ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்

நவம்பர் 14 - உலக நீரழிவு தினம்

டிசெம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

அன்பே செல்வம்


'அள்ளக் குறையாதது;கொடுத்தால் தீராதது' என்று கல்வியைப் பற்றிச் சொல்வார்கள். அன்பும் அப்படித்தான். கல்வியை விடவும் மேம்பட்டது அன்பு!

நாம், நம் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், என்கிற எல்லைகளைக் கடந்து , எலோரிடமும் அன்பு காட்டும் தன்மை தான் தெய்வகுணம்!

தனக்கு
உதவியவர்களை மட்டுமல்ல; தனக்குத் துன்பம் தந்தவர்களையும் மன்னித்து இரட்சிக்கும் படிவேண்டிய அந்த தெய்வ குணத்தின் அடையாளம்தான் இயேசு பெருமான்!

அன்பு
என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது; எந்த விதத்திலும் சுயநலம் அற்றது; எல்லா உயிர்களிடமும் நேசம் கொண்டது; எந்த சிவனிடமும் வெறுப்பில்லாதது என்கிற உண்மை விளக்கமாக உலவிய இயேசு பெருமானின் அவதாரத் திருநாள் இந்த மாதம் வருகிறது.

அந்த
அன்பு நம் அனைவரின் எண்ணங்களிலும், செயல்களிலும் இடம் பெறட்டும். அதுதான், கிருஸ்துமஸ் திருநாள் நமக்கு உணர்த்தும் செய்தி!

ஆக்கம்:கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

புதன், 3 டிசம்பர், 2008

நல்லதோர் விடுமுறை............

பள்ளி மாணவர்களே மற்றும் எஸ்.பி.எம், எஸ்.தி.பி.எம். எழுதி முடித்த மாணவர்களே உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதோடு இந்த விடுமுறையை நல்வழியில் கழிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடத்தை மறந்து விடாதீர்கள் வருகின்ற ஆண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை இப்பொழுதே யோசிக்க துவங்குங்கள். நாட்களை வீணே செலவழிக்காமல் நாட்டுக்கும்,வீட்டுக்கும்,சமுதயதிர்க்கும் மேலும் உடலுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் பயன் படுத்துங்கள்.

காலத்தை நாம் மதிப்போம் போற்றுவோம்;காலம் நம்மை அழைத்து செல்லும்...
ஆக்கம்:கீர்த்தி செல்வராஜு
தெமேங்கோங் இப்ராஹிம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி