செவ்வாய், 11 நவம்பர், 2008

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

உடல் ஊனமுற்ற இவரால் சாதிக்கும் பொழுது நம்மால் நிச்சயம் இயலும்..

எஸ்.பி.எம் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முதலில் தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் தமிழ் மாணவர்களாகிய எங்களின் வாழ்த்துகள். எஸ்.பி.எம் என்ற ஒரு நிலையை அடைந்த உங்களுக்கு மற்றுமொரு வாழ்த்துகள். உங்கள் வாழ்கையை முடிவெடுக்கும் ஒரு நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். இந்தத் தேர்வு உங்களின் வாழ்க்கை இலட்சியத்தை அடைவதற்கு ஒரு முக்கியமான படி. ஏறுங்கள் மாணவர்களே! வாழ்கையின் வெற்றிப்படியின் உச்சத்திற்குச் சென்று வெற்றிக்கனியைப் பறிக்கச் செல்லுங்கள்!

பெற்றோர்கள் தத்தம் அன்புச் செல்வங்களுக்கு ஒரு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர ஒரு பயமாக இருக்கக் கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகள் சிறப்பான முடிவை எடுக்காவிடில், அவர்களைத் தயவு செய்து வசை பாடாதீர்கள். அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்து அவர்களுக்கு ஊக்கம் தாருங்கள். அரசாங்கம் சார்ந்த இயக்கங்களும் சார்பற்ற இயக்கங்களும் சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கம் தருவதோடு, சிறந்த முடிவைப் பெறாத மாணவர்களைக் கை கழுவி விட வேண்டாம். எது எப்படி இருந்தாலும், இந்த வருட எஸ்.பி.எம் தேர்வில் இந்திய மாணவர்கள் நிச்சயமாக ஒரு புதிய சாதனையைப் படைக்க முடியும்.......

உனக்கு என்ன வேண்டும் என்று நினைத்தால் அதனை நீ சாதிக்கலாம்!
அதற்கு எதிர்மாறானவன் நீ என்று உன்னைக் காட்டிக் கொள்ளாதே!

ஆக்கம்:
கலையமுதன் ரவீந்திரன்

தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

கருத்துகள் இல்லை: