திங்கள், 29 டிசம்பர், 2008


நல்லாசிரியரின் நல்லியல்புகள்

தோற்றப்பொலிவு
சுறுசுறுப்பு
தூய உள்ளம்
நேரிய வாழ்க்கை
மொழிப் பற்று
மொழிப் புலமை
அறிவாற்றல்
உணர்திறன்
உணர்த்தும் திறன்
கற்பனைத் திறன்
சொல்லும் திறன்
விளக்கும் திறன்
தெளிவுற அறிந்திடுதல்
மாணர்வர்களிடத்து அன்பு
உடன் ஆசிரியர்களிடம் நல்லுறவு
வரலாற்றுணர்வு
அறிவியல் அணுகுமுறை
விழிப்புணர்ச்சி
அறியும் அவா
ஆய்வு வேட்கை
பயிற்றுவித்தலில் ஆர்வம்
காலம் போற்றுதல்
சமூகக் கடமையுணர்வு
வாய்மை
தனித்தன்மை
தலைமைப் பண்பு
வழிகாட்டுதல்
தியாகம்
சான்றான்மை

எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த பண்புகள் இருக்க வேண்டும் என்று கூற முடியாது. இவை அனைத்தும் இருந்தே ஆக வேண்டும் என்றுதான் கூறவேண்டும்......

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி


1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்பர் கலையமுதன் இரவிந்திரன் அவர்களே,

ஆசிரியர்கள் உணர்ந்து பார்க்க வேண்டிய நல்ல இடுகையை வழங்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

நல்லாசிரியருக்குரிய பண்புநலன்களை நம்முடைய நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் அன்றே சொல்லியிருப்பதை இங்கே நினைவுக்கூர்வது பொருத்தமாக இருக்கும்.

அதாவது:-

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரைவன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே (நூற்பா26)

1.நற்குடிப்பிறப்பு
2.உயிரிரக்கப்பண்பு(சீவகாருண்யம்)
3.கடவுள் வழிபாடு
4.மேன்மையான குணம்
5.பல்கலை பயின்ற ஆற்றல்
6.மாணவர்க்குப் புரியும்படி கற்பிக்கும் வன்மை
7.நிலம் போன்ற பொறுமை
8.மலைபோன்ற உயர்ச்சிந்தை
9.துலாக்கோல் போன்ற நடுவிநிலைமை
10.மலர் போன்ற மென்மை
11.உலகியல் அறிவு
12.உயர்குணங்கள் அனைத்தும்

இப்படியான தகுதிகள் அமையப்பெற்றவரே நல்லாசிரியர் என்பது நமது தமிழ் முன்னோர் வகுத்த மரபு.

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதை நினைவில் கொண்டு ஆசிரியர் அனைவரும் நல்லாசிரியர் ஆகுவோம்!!