வெள்ளி, 26 டிசம்பர், 2008

இன்றைய திகதியில்

கடந்த வருடம் இதே திகதியில் மனித இனத்தை அழிக்கும் சக்தி வாய்ந்த சுனாமி என்ற பேரலை எத்தனையோ மனித உயிர்களை மூழ்கடித்தது. வருடங்கள் உருண்டோடினாலும் அந்த பேரலையின் நினைவுகள் சிலரின் எண்ணத்தில் இன்னும் பசுமையாக உள்ளது. இன்று வரை இதற்கு இயற்கை காரணமா இல்லை மனிதர்கள் மீது இந்த பூமி தாய் கொண்ட ஆத்திரமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற சுனாமி அலை மீண்டும் நிகழுமா என்பது கடவுளின் கையில் தான் உள்ளது.

இந்த சுனாமி பேரலையில் தப்பித்தவர்கள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களில் ஒருவர் மேழுள்ள படத்தில் உள்ள குழந்தைதான்.யாரென்று தெரிகின்றதா ?

ஆம் துளசி என்ற குழந்தைதான் அது. நூற்றுக்கணக்கான மனிதர்களை கொன்ற அதே நீர்தான் இந்த குழந்தையை காப்பாற்றியது.அலையில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மீண்டும் அதே அலையில் மிதந்து கொண்டே உயிர் தப்பியது.பாவம் இந்த குழந்தையை கொல்ல அந்த பேரலைக்கு மனசு வரவில்லை என நினைக்கின்றேன்.

இந்த பேரலை மீண்டும் நிகழாமல் இருக்க நாம் கடவுளை பிராத்தனை செய்வோமாக ........

இந்த பேரலையின் அழிவை யாராலும் மறக்க முடியாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

1 கருத்து:

priyamudanprabu சொன்னது…

இனி இதுபோல நிகழாமல் இருக்க இயற்கையை பிராத்திப்போம்