புதன், 13 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்துகள்


மலேசியாவில் வாழும் அனைத்து இந்திய வாழ் மக்களுக்கும் இந்த வலைப்பதிவின் சார்பாக இனிய பொங்கல் வாழ்த்துகள்.இந்த வருடம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு சிறப்பான பொங்கலாக அமைய எங்களின் வாழ்த்துகள் ...

நன்றி...
கலையமுதன் ரவீந்திரன்

வியாழன், 19 நவம்பர், 2009

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1)

திருத்தமிழ்:

2012 திரைப்படத்தின் காட்சிகள் மறைந்த தமிழர் தாயகமாம் குமரிக்கண்டத்தின் பேரழிவை எனக்குக் கண்முன் கொண்டுவந்து காட்டியதாகக் கடந்த பதிவில் எழுதியிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்) அதற்கு, அன்பர் நீலகண்டன் இவ்வாறு மறுமொழி எழுதியிருந்தார்.

//அறிவியல் ரீதியில் குமரி கண்டம் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விடயம். அஃது ஆழிப் பேரலையால் அழிந்துபோனது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.//

//தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.//

எனவே, குமரிக்கண்டம் பற்றி அறிஞர் பெருமக்கள் கண்ட சான்றுகளை முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தக் கட்டுரை. இதன் மூல வடிவத்தை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய ‘தமிழர் வரலாறு’ எனும் நூலில் காணலாம்.

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலின்படி, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதிலுள்ள நிலப்பகுதியில் நெடுந்தொலைக்கு இருந்துள்ளது. இது தென்மேற்காகத் திரும்பி ‘மடாகாசுக்கர்’ (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது. அம்மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் (இன்றைய இமயமலைப் போன்ற) பெருமலைத் தொடர் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் செய்தியை சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை அறிவிகின்றார்.

இன்றைய இலங்கைக்குத் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தொலைவுக்கு நீண்டிருந்தது என்றும், அதன் மேற்குப் பகுதி நெடுகிலும் மேற்சொன்ன பெருமலைத்தொடர் அமைந்திருந்ததாக அறியப்படுகிறது.

“முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி”
என்று நெட்டிமயாரும் (புறம்.9)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும்”
என்று இளங்கோவடிகளும் (சிலப்.11:19-20) பாடியிருப்பதால், குமரிக்கண்டமும் அதன் தென்கோடியின் மலைப்பகுதியிலிருந்த குமரி மலைத்தொடரும், அதிலிருந்து உருவாகி பாய்ந்தோடிய பஃறுளி ஆறும் கட்டுக் கதையோ அல்லது பொய்ப் புரட்டோ அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

“தொடியோள் பௌவமும்” என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். “தென்பாலி முகத்திற்கு வட எல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றுக்கும் குமரி எனும் ஆற்றுக்கும் இடையே ஏழ்தெங்கு நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறுப்பனை நாடு என்னும் 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடு, நதி அனைத்தும் விளங்கின”. இவ்வாறு குமரிநாட்டைப்பற்றி பகுத்துக் கூறப்பட்டிருப்பது கட்டுச்செய்தியாக இருக்க முடியாது.


“காலமுறைபட்ட உண்மைகளைக் கொண்டு, இன்றைய தென்கிழக்காசியத் (மலையத்) தீவுக்கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்டது. போர்னியோ (Borneo), சாவா (Jawa), சுமத்திரா (Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்படிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக்கண்டத்தோடும் அது இனைக்கப்பட்டு இருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு(Selibis), மொலுக்காசு, நியுகினியா, சாலோமான் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப்பட்டிருந்தது” (Castes and Tribess of Southern India Vol.1.p20,21) என்ற நூல் இதனைக் குறிக்கின்றது.

செடிகொடிகளாலும் விலங்குகளினாலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலேயே இருந்த மிக நெருங்கிய ஒற்றுமைகளைக் கண்டிபிடித்த ஓல்டுகாம் என்பவர், முன்காலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என முடிவு செய்கின்றார்.

“இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டுச் சீமைப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீபகற்பத்தின் (Peninsula) தென்கோடியில் இருந்திருக்கின்றன. அவை, அயல்நாட்டு வணிகம் நடந்துவந்த சில துறைமுகங்களில் அதாவது குமரிமுனை அருகிலுள்ள கோட்டா ஆற்றிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி அருகில் இன்னும் இருக்கின்றன” என்ற செய்தியை கால்டுவெல் பதிவு செய்திருக்கிறார்.

இப்படியாக, தமிழ் இலக்கிய நூல்களிலும் மேலை நாட்டவர் ஆய்வு நூல்களிலும் குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் சான்றுகளாக நிலைபெற்று இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில், குமரிக்கண்டத்தின் நிலைமை நான்கு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதாக அறிய முடிகிறது. அவை:-

1.ஆப்பிரிக்காவோடும் ஆத்திரேலியாவோடும் கூடிய பழம் பாண்டிநாடு
2.ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு
3.ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு
4.சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு


மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக் கதைகளென ஒதுக்கிவிட முடியாது. குமரிக்கண்டம் பற்றிய அரிய செய்திகள் பல தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமானதாக இருப்பதால் அவை இன்னமும் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

வரலாற்றை உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறுவது மாபெரும் கலங்கம் என்ற கூற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் குமரிக்கண்ட ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். முறைசெய்யப்பட்ட நேர்மையான ஆய்வுக்குக் உட்படுத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அப்போதுதான் 2012 படத்தில் நிகழும் பேரழிவை ஒத்ததான பாரியதோர் அழிவு குமரிக்கண்டத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த உண்மை தமிழ் இலக்கிய ஏடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, உலக வரலாற்று ஏட்டில் பொறிக்கப்படும்.

புதன், 15 ஜூலை, 2009

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? ................................



புதன், 15 ஏப்ரல், 2009

தமிழ் திங்களும் இயற்கை அன்னையும்

ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு பல நிறைந்தவை. பருவகால மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். பன்னிரெண்டு மாதமும் அழகானவை. அதிலும் அழகு அம்மாதங்களை நம் முன்னோர்கள் அற்புத சொற்றொடர்களில் விளக்கிய விதம். தமிழ் குழந்தை இயற்கை அன்னையிடத்தே தவழ்வதை இரசிப்போம்...


சித்திரையில் சோலை தழைக்கும்.

வைகாசியில் காற்று வாய் திறக்கும்.

ஆனிக்காற்று அலறி வீசும்.

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.

ஆவணியில் மேகம் தாவணி போடும்.

புரட்டாசி வெயில் பொன்னுருகச் காயும்.

ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்.

கார்த்திகையில் கன மழை பொழியும்.

மார்கழி பனி ஊசியாய் துளைக்கும்.
தைப் பனி தரையே நடுங்கும்.

மாசியில் மாம்பூ பூக்கும்.

பங்குனி வெயில் படையைக் கலக்கும்.

மலர்ந்திருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் எல்லா நலமும் தந்து
அனைவரும் வளமுடன் வாழ இறைவனைத் தியானிப்போம்_
பகைமையை அன்பால் வெல்வோம்!

- தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! -

ஆக்கம்
: மலர்விழி சுப்ரமணியம்

வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டு வாழ்த்துகள்


இன்று முடிவு நாளை தொடக்கம்

இதுதான் உலக நீதி,


தோல்வி கண்டால் வெற்றி உண்டு,

இதுதான் வாழ்க்கை நீதி,


முடிந்ததை விடுவோம்,

நடப்பதை நினைப்போம்....


விதியென்ற ஒன்றை,

மதிகொண்டு வெல்வோம்....


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....


ஆக்கம் : வசந்தராவ் அப்பளசாமி

தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

புதன், 31 டிசம்பர், 2008

புதிய ஆண்டு



இன்னும் சில மணி நேரத்தில் நாம் ஒரு புதிய ஆண்டினுள் கால் தடத்தை பதிக்க உள்ளோம். புதிய முகங்கள், புதிய சுற்றுச்சூழல், புதிய இடங்கள், புதிய கனவுகள் போன்ற புத்தம் புது விஷயங்களை நாம் சந்திக்க உள்ளோம். கடந்த வருடத்தில் நடந்த நல்ல விஷயங்களை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம். கெட்டதை மறந்து விடுவோம். பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற புதிய உலங்கங்களுக்கு செல்லும் அணைவருக்கும் எங்களின் வாழ்த்துகள்.எங்களின் வலைப்பதிவின் சார்பாக அணைவருக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.




ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

திங்கள், 29 டிசம்பர், 2008


நல்லாசிரியரின் நல்லியல்புகள்

தோற்றப்பொலிவு
சுறுசுறுப்பு
தூய உள்ளம்
நேரிய வாழ்க்கை
மொழிப் பற்று
மொழிப் புலமை
அறிவாற்றல்
உணர்திறன்
உணர்த்தும் திறன்
கற்பனைத் திறன்
சொல்லும் திறன்
விளக்கும் திறன்
தெளிவுற அறிந்திடுதல்
மாணர்வர்களிடத்து அன்பு
உடன் ஆசிரியர்களிடம் நல்லுறவு
வரலாற்றுணர்வு
அறிவியல் அணுகுமுறை
விழிப்புணர்ச்சி
அறியும் அவா
ஆய்வு வேட்கை
பயிற்றுவித்தலில் ஆர்வம்
காலம் போற்றுதல்
சமூகக் கடமையுணர்வு
வாய்மை
தனித்தன்மை
தலைமைப் பண்பு
வழிகாட்டுதல்
தியாகம்
சான்றான்மை

எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த பண்புகள் இருக்க வேண்டும் என்று கூற முடியாது. இவை அனைத்தும் இருந்தே ஆக வேண்டும் என்றுதான் கூறவேண்டும்......

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி


வெள்ளி, 26 டிசம்பர், 2008

இன்றைய திகதியில்

கடந்த வருடம் இதே திகதியில் மனித இனத்தை அழிக்கும் சக்தி வாய்ந்த சுனாமி என்ற பேரலை எத்தனையோ மனித உயிர்களை மூழ்கடித்தது. வருடங்கள் உருண்டோடினாலும் அந்த பேரலையின் நினைவுகள் சிலரின் எண்ணத்தில் இன்னும் பசுமையாக உள்ளது. இன்று வரை இதற்கு இயற்கை காரணமா இல்லை மனிதர்கள் மீது இந்த பூமி தாய் கொண்ட ஆத்திரமா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற சுனாமி அலை மீண்டும் நிகழுமா என்பது கடவுளின் கையில் தான் உள்ளது.

இந்த சுனாமி பேரலையில் தப்பித்தவர்கள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களில் ஒருவர் மேழுள்ள படத்தில் உள்ள குழந்தைதான்.யாரென்று தெரிகின்றதா ?

ஆம் துளசி என்ற குழந்தைதான் அது. நூற்றுக்கணக்கான மனிதர்களை கொன்ற அதே நீர்தான் இந்த குழந்தையை காப்பாற்றியது.அலையில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மீண்டும் அதே அலையில் மிதந்து கொண்டே உயிர் தப்பியது.பாவம் இந்த குழந்தையை கொல்ல அந்த பேரலைக்கு மனசு வரவில்லை என நினைக்கின்றேன்.

இந்த பேரலை மீண்டும் நிகழாமல் இருக்க நாம் கடவுளை பிராத்தனை செய்வோமாக ........

இந்த பேரலையின் அழிவை யாராலும் மறக்க முடியாது.

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

வியாழன், 25 டிசம்பர், 2008

கிருஸ்துமஸ் வாழ்த்துகள்


இந்த இன்பமான நாளில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் அனைத்து கிருஸ்துவ குடும்பங்களுக்கும் எங்களின் வலைப்பதிவின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என்பதில் சிறதும் சந்தேகம் இல்லை.

வாழ்த்துகளுடன்
தாய்மொழி வலைபதிவார்கள் குழு

வெள்ளி, 19 டிசம்பர், 2008

முக்கிய தினங்கள்

நமது நாள்காட்டியை அடக்கடி பார்ப்பது ஒரு வழக்கமான செயல். ஆனால் சில தேதிகள் சில முக்கிய தினங்களாக விளங்குகின்றன.அவைகளில் சில உங்களுக்காக.

மே 1- உலக தொழிலாளர் தினம்.

ஜனவரி 31- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்.

ஏப்ரல் 7- உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22- உலக பூமி தினம்

மே 3 - அனைத்துலக ஆற்றல் தினம்.

மே 31 - புகையிலை இல்லாத தினம்

ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்

நவம்பர் 14 - உலக நீரழிவு தினம்

டிசெம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 10 - மனித உரிமைகள் தினம்

ஆக்கம்:

கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி