வெள்ளி, 19 டிசம்பர், 2008

அன்பே செல்வம்


'அள்ளக் குறையாதது;கொடுத்தால் தீராதது' என்று கல்வியைப் பற்றிச் சொல்வார்கள். அன்பும் அப்படித்தான். கல்வியை விடவும் மேம்பட்டது அன்பு!

நாம், நம் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், என்கிற எல்லைகளைக் கடந்து , எலோரிடமும் அன்பு காட்டும் தன்மை தான் தெய்வகுணம்!

தனக்கு
உதவியவர்களை மட்டுமல்ல; தனக்குத் துன்பம் தந்தவர்களையும் மன்னித்து இரட்சிக்கும் படிவேண்டிய அந்த தெய்வ குணத்தின் அடையாளம்தான் இயேசு பெருமான்!

அன்பு
என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது; எந்த விதத்திலும் சுயநலம் அற்றது; எல்லா உயிர்களிடமும் நேசம் கொண்டது; எந்த சிவனிடமும் வெறுப்பில்லாதது என்கிற உண்மை விளக்கமாக உலவிய இயேசு பெருமானின் அவதாரத் திருநாள் இந்த மாதம் வருகிறது.

அந்த
அன்பு நம் அனைவரின் எண்ணங்களிலும், செயல்களிலும் இடம் பெறட்டும். அதுதான், கிருஸ்துமஸ் திருநாள் நமக்கு உணர்த்தும் செய்தி!

ஆக்கம்:கலையமுதன் ரவீந்திரன்
தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

கருத்துகள் இல்லை: