ஞாயிறு, 12 அக்டோபர், 2008

மலேசிய இந்திய இளைஞனே நீ கண் விழி......


இன்றைய உலகம் மட்டுமே நவ நாகரீகத்திற்கு மாறியுள்ளதே தவிர, நமது மலேசிய இந்திய இளைஞர்கள் இன்றும் அன்று போலவேதான் இருக்கிறார்கள். ஆம் அன்பர்களே உலகம் இந்த சில பல ஆண்டுகளில் எவ்வளவோ மாறுதல்களை கண்டுள்ளது மக்கள் அம்மாருதல்களை புரிகின்றினர். ஆனால், நமது இந்திய இளைஞர்கள் இன்றும் மாறுதல்களை கண்டு வியப்பவர்கலாகவே இருக்கிறார்களே தவிர எந்த ஒரு மாறுதல்களையும் நிகழ்த்த வில்லை.இதற்கான காரணம் என்ன?

அஸ்திவாரம் சரியாக அமைந்தால் தான் ஒரு கட்டிடம் மேலோங்கி முழுமையாக நிற்கும் இல்லையென்றால் அக்கட்டிடம் சில நொடிகளில் கூட சரிந்து விழலாம். அது போலத்தான் இந்திய இளைஞன் ஒருவன் மேலோங்கி நிற்க வயதில் மூத்தவர்கள், இன்னும் அழுத்தமாக சொல்ல சொன்னால் போதுமான தலைமைத்துவம் நிலவ வேண்டும் நம் இந்தியர்களிடையே! வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் அல்ல மாறாக இளைஞனே உன்னை தான் சொல்கிறேன் தலைமை துவம் உன்னில் தேடு இவ்வுலகம் உன்னை போற்றும்.

ஆனால், தலைமைத்துவம் மட்டும் இருந்தால் போதுமா? இல்லை அத்தோடு இளைஞர்கள் நீங்கள் உங்கள் ஆசையை அதாவது ஆணவம்,கன்மம்,மாயை ஆகிய இம்மூன்றையும் விட்டொழிக்க வேண்டும். ஆசை யாரை விட்டது என்று உங்களுள் தோன்றலாம். ஆம், ஆசையை அகற்ற முடியாது ஆனால் குறைக்கலாம் அல்லவா? சிந்தியுங்கள் இளைஞர்களே! ஆசையை கட்டு படுத்தி நாட்டையும் சரி வீட்டையும் சரி ஏன் எதுவாக இருப்பினும் மேலோங்க செய்ய இந்திய இளைஞன் நாம்தான் பங்காற்ற வேண்டும். நமது போதுமான நேரத்தை போதுமான வகையில் செலவிட பழகிக் கொள்ள வேண்டும். இன்றைய பல இந்திய இளைஞர்கள் போதைப் பொருள் அடிமை, விலை மாதுவுக்கு அடிமை, மற்றும் நண்பர்களிடத்து அடிமை போன்று இன்னும் எத்தனையோ வகையில் சீரழிகின்றனர். சீரழிப்பதை தவிர்க்க இளைஞனே நீ கண் விழி...


மேலும், இன்றைய இந்திய இளைஞனே நமக்கான வாய்ப்பு மிகக் குறுகிய நிலையில் தான் இன்றும் நமது நாட்டில் அமைந்துள்ளது. அதாவது மேல் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு, வியாபார ரீதியிலான வாய்ப்பு, அதைத் தவிர்த்து இன்னும் எத்தனையோ வாய்ப்புகளை நமது இளைஞர்கள் தவற விட்டு விடுகின்றனர் அத்தோடு தவற வைக்க விடுகின்றனர். அதாவது ஒன்றாவது போதுமான மதிப்பெண்களை பெற்றிருந்தும் குறிப்பிட்ட சில மேல் படிப்பு மையங்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை, மற்றொன்று இளைஞர்கள் தாமாகவே குறைந்த மதிப்பெண்களை பெற்று விட்டு பிறகு மேல் கல்வி கூடங்களை சாடுகின்றனர். இம்மாதிரியான நிகழ்வுகளை தவிர்க்க இளைஞர்கள்
கிடைக்க பெரும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் நல்வழியில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

இறுதியாக, நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நமது இந்திய இளைஞர்கள் காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும், மேலும் பொறுத்தவன் பூமி ஆள்வான் என்பதற்கொப்ப எதுவாக இருப்பினும் தீர ஆலோசித்து பிறகு, சரியான முடிவை தேர்வு செய்து அதனை நடை முறைக்கு கொண்டு வர வேண்டும். நமது நாட்டில் ஐம்பத்து ஆண்டுகள் நாம் அதாவது இந்திய இளைஞர்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டு இன்று ஓர் அளவிற்கு தலை தூக்க ஆரம்பித்து உள்ளோம் இதனை தொடர்வதற்கு அரசாங்கமும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் அதோடு பற்பல கழகங்களும் கை கோர்த்து நம் இந்திய இளைஞர்கள் ஒரு புதியதோர் விடி வெள்ளி நிலைமைக்கு கொண்டுச் செல்ல பெரிதும் துணைப்புரிய வேண்டும்.

எதுவாக அமையினும் இவ்வளவு முயற்சிகளுக்கு பிறகும் நமது இளைஞர்கள் தோல்வியை தழுவினார்களே யானால் அதற்கு பிறகும் அத்தோல்விக்கு அவ்விளைஞனே முழு காரணம்.

சிந்தனைத் துளி: வசந்தராவ் அப்பளசாமி
இயற்றியது: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சிறப்பான சிந்தனை :)
_வாழ்த்துக்கள்_
ஒவ்வொரு சொற்களும் மனதில் தோன்றியிருக்கும் ஆதங்களின் எதிரொலி!

//இறுதியாக, நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால்,//
இது இறுதியல்ல, தொடக்கம்!!!

நம் இளைஞர்கள் அனைவரும் தங்களின் கடமைகளைச் சிந்தித்துப்பார்த்தார்களேயானால் எதிர்காலம் நம் சமுதாயத்திற்குச் சாதகமாகும்!

*வாழ்க நம் சமூகம்*