வியாழன், 16 அக்டோபர், 2008

அடியேன் எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்,மலேசியாவில் இன்றைய தமிழின் நிலைமை.(அலைகள் மூன்று )

மீண்டும் போகின்றது அடியேனின் எண்ணங்கள், தமிழ் மொழிக்கு சுடர் கொடுக்க ஒற்றுமையோடு உயர்வோம்.. ஆம், இன்றைய சிறு எண்ணம் யாதெனில் மாணவர்களின் பங்காகும். விளக்கமாக கூறின் தமிழை வளர்க்க மாணவர்கள் அளப்பறியாது ஆற்ற வேண்டிய சில கடமைகள் ஆகும்.

முதலாவதாக மாணவர்கள் தமிழ் பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும். இவ்வார்மானது பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே வளர வேண்டும். பிறந்தது முதலே அவர்களுக்கு தமிழில் பேச பழக கற்று தர வேண்டும். இப்படி செயதொமாயினில் பிள்ளைகளுக்கு தமிழை கற்க சுய ஆர்வம் தோன்றும்.

பின்னர், தமிழைக் கற்று தரப்படும் பாலர் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பாலர் பள்ளியில் குழந்தைகள் தமிழை ஆர்வமோடு கற்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்று அதிகமாகவே வியர்வை சிந்த வேண்டும். மாணவர்கள் தமிழை எளிய வகையில் புரிந்துக் கொள்ள கூடிய நிலைமையில் தமிழை போதிக்க வேண்டும்.

மேலும்,வேற்று மொழி புத்தகங்களை தவிர்த்து தமிழ் மொழியில் பிரசுரிக்க பட்ட புத்தகங்களை அதிகம் பயில மாணவர்களை தூண்ட வேண்டும். அதும் மட்டுமா மாணவர்களாகிய நாமும் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முழு மூச்சோடு தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இடை நிலைப் பள்ளி மாணவர்கள் வயதில் மூத்தவர்கள் என்ற முறையில் மட்டுமல்லாமல் செயலிலும் மூத்தவர்கள் என நிரூபிக்க பி.எம்.ஆர்., எஸ்.பி.எம்., மற்றும் எஸ்.தி.பி.எம், ஆகிய சோதனைகளில் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி இலக்கிய பாடத்தை கற்றுக் கொள்வதை சுய ஆர்வத்தோடு கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.

மீண்டும் அடியேனின் எண்ணங்கள் தொடரும். அலைகள் ஓய்வதில்லை அது போல அடியேனின் எண்ணங்களும் என்றும் ஓய்வதில்லை. மீண்டும் அலைகள் பாயும் வரை அடியேனின் அன்பார்ந்த வாழ்துக்கள், நன்றி.

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

கருத்துகள் இல்லை: