சனி, 22 நவம்பர், 2008

காலம் பொன்னானது

அன்புள்ள மாணவமணிகளுக்கு எனது முத்தான வணக்கங்கள். இது விடுமுறை காலம். உங்களில் பலர் பி.எம்.ஆர் சோதனையை முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்திருப்பீர்கள். இன்னும் பலர் எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளை எதிர் கொண்டு ஆயத்தம் செய்து கொண்டிருப்பீர்கள்.உங்கள் அனைவருக்கும் ஒரு செய்தி. வாழ்க்கையில் நாம் சில பொக்கிஷங்களை இழந்துவிட்டால் அதனை மீண்டும் மீட்ட முடியாது.

அதில் ஒன்றுதான் நேரம். அதனைத் தயவு செய்து இழந்துவிடாதீர்கள்.ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய வல்லமைக் கொண்டது. நேரம் என்பது உயிரைப் போன்றது. ஏன் அதைவிட மதிப்பில் உயர்ந்தது என்றுகூட சொல்லலாம். பணத்தால் கூட அதனை நம்மால் மீட்ட முடியாது. ஹாரவி மேகை என்ற ஒரு வெளிநாட்டவர் நேரத்தை பற்றி ஒரு சில வரிகளில் கூறியுள்ளார். இதோ அது உங்களுக்காக

நேரம் இலவசம், ஆனால், அதை நீங்கள் உங்களின்
சொத்தாக ஆக்க முடியாது,
ஆனால் நீங்கள் அதனைப் பயன்படுத்தலாம்,
நேரத்தை நீங்கள் வைத்துக்கொள்ள முடியாது,
ஆனால் நீங்கள் அதை நல் முறையில் செலவழிக்கலாம்,
அதை நீங்கள் தொலைத்துவிட்டால், மீண்டும் பெறமுடியாது


ஆக்கம்:
கலையமுதன் ரவீந்திரன்

தெமேங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்