செவ்வாய், 30 செப்டம்பர், 2008

சிரிக்கவா? சிந்திக்கவா?

வகுப்பறை ஒன்றில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் போதித்து கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆசிரியர் மாணவன் ஒருவனிடம் கேள்வியும் கேட்கிறார்.........

ஆசிரியர்: மாணவர்களே! ஒரு மாணவன் என்ற முறையில் நீங்கள் அனைவரும்
ஆசானகிய நான் கற்று தரும் அனைத்தையும் ஆழமாகமனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.மேலும் தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தன்னை தெளிய படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள்: ஆம் ஐயா !

ஆசிரியர்: இதைத் தவிர்த்து எந்த ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடத்தை புரிய
வைக்க இயலவில்லையோ அவன் ஒரு மாங்கா மடையன் ஆவான்.
என்ன நான் சொன்னது புரிந்ததா மாணவர்களே?

மாணவர்கள்: புரியவில்லை ஐயா...

துணுக்குகளை படித்து மகிழ்ந்தால் மட்டும் போதாது மாறாக அதனுள் விளக்க படும் முக்கிய கூறுகளை நாம் கண் கூர்ந்து கவனித்து நம்மில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பயிற்சி ஆசிரியராக திகழும் அனைவருக்கும் இத்துனுக்கு ஒரு அறிவுரையே.....

மலேசிய ஆசிரியர்களின் தரம் குன்றாமல் இருக்க குறிப்பாக இந்திய ஆசிரியர்கள், மேலும் சிறப்பாக இயங்க இறைவனை பிராத்திப்போம்.
நன்றி வணக்கம்.

ஆக்கம்: கீர்த்தி செல்வராஜூ
(தெமெங்கோங் இப்ராஹிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

தெமெங்கோங் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி, 'கழகம்' என்ற தரத்தை எட்டி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே கல்லூரி என்று குறிப்பிடும் இடத்தில் கழகம் என்று திருத்திக்கொள்ளுங்கள்..

'தாய்மொழி' தலைப்பின் கீழ் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் என்று வருகிறது. அதனை 'பயிற்சி ஆசிரியர்கள்' என்று திருத்திக் கொள்ளுங்கள்.